Wednesday, September 16, 2009

பெரியார் பணி முடிப்போம் இல்லை இல்லை காப்போம்

பெரியாரின் பிறந்தநாளான்று பெரியார் அதைச் செய்தார் இதைச் செய்தார் எனவே எல்லோரும் ஈரோட்டுக் கண்ணாடிமாட்டுங்கள் என வழக்கம் போல்சொல்ல வரவில்லை
”எனக்குத் தகுதி உள்ளதோ இல்லையோ யாரும் முன் வராததால் நானே என் தோளில் போட்டுக்கொள்கிறேன்”எனக் கூறி சமூகப்பணிசெய்யப் புறப்பட்டார்.
அன்று ஒரு பெரியார் இன்று எத்தனையோ பெரியார் தொண்டர்கள்.அமைப்பாகவும் தனி மனிதரகவும் எண்ணிக்கையில் அதிகம்.நாம் பெரியாரியலை எவ்வளவுதூரம் நகர்த்த பயன்பட்டுள்ளோம்என்பதை சுய ஆய்வு செய்வதுதான் நாம் எடுத்து வைக்கும் அடி சரியானதா இல்லையா? அதாவது பெரியாரியலைச் சொல்லிக்கொண்டு வேறு மயக்கத்தில் உள்ளோமா இல்லையா என்பது தெளிவாகும்.
இதை எழுதுவதன் நோக்கம் அவர் சரி இவர் சரியில்லை என்றெல்லாம் பேச அல்ல.மாறாக இச்சமூகம் சந்தித்து வரும் ஒவ்வொரு இடியாப்பச் சிக்கலையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை சுய விமர்சனமாகப்பார்க்கவே இதை த் தொடங்குகிறேன்.
தற்போது நடந்தேறியுள்ள யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத நம் இன அழிப்பு இட்லருகும் முசோலினிக்கும் பாடம் நடத்தும் தகுதியை ராஜபக்சேவுக்குக் கொடுத்துவிட்டது.இந்த இன அழிப்பு நிகழ்ந்தபோது எத்தனைத் துடிப்புகளைக் காட்டியும் தடுக்க இயலாமல் தவித்த உண்மையானதலைவர்கள் ,நேர்மையாளர்கள் அதன் பின் இனி அடுத்து நம் கடமை என்ன என்பதை முடிவு செய்து தன்னாலான வேலையைச் செய்யத்தொடங்கிவிட்டனர்.(ஈழம்- நாம் இனி செய்ய வேண்டியது என்ன?-தோழர் கொளத்தூர்.மணி)
அதேசமயம் தற்போது தமிழின அழிப்பிற்கு காரணம் தமிழினத்ட் துரோகமே என மெல்லப் பரப்பப்ட்டு வருகிறது, உண்மைதானா?
நடந்து முடிந்த் நிகழ்வுகளில் படித்த செய்திகளிலும் பெரும்பாலும் நம் கண் முன் நிறுத்தப் படுவது துரோகமே.(நக்கீரன் - ஜெகத் கஸ்பர் கட்டுரையில் பெரும்பாலும் அதுவெ முனிறுத்தப்படுகிறது)நிகழ்வுகளும் உண்மையாய் இருக்கலாம்,அப்படியானால்?…. இதை முன்னிறுத்தும் சக்த்திகள் கூறுவதுபடி தமிழந்துரோகத்தால் அழிந்த்து போனானே ஒழிய அழிக்கப்படவில்லை என்பது உண்மையா?
மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.ஆனால் இந்த உனர்ச்சி வயப்பட்ட முடிவு மாபெறும் ஆபத்தை உள்ளடக்கியுள்ளது.என்ன ஆபத்து? வேறொன்றுமில்லை பார்ப்பான் - தமிழனாக்கப்படும் ஆபத்து.பார்ப்பான் திருந்தி நேர்மையாகத் தன்னை மாற்ரி தமிழனாவது அதாவது இச்ச்மூகத்தொடுகலப்பது என்பது வேறு(நல்ல கற்பனை).மாறாக தமிழகச் சிக்கல்களைப் பார்ப்பானோடு அய்க்கியமாக்கிப் பார்ப்பானைத் தமிழனாக்குகிற முயற்சி ஆபத்தானதே.
ஆம்,தமிழின அழிப்பு நிகழ்ந்தபோது அதன் பின்னனியை மக்களுக்குக் கொண்டு செல்லாமலும்,அப்படிக் கொண்டு சென்றவர்களும் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது.பெரியார் திராவிடர் கழகமெடுத்த தேர்தல் நிலைப்பாட்டிற்கும், மற்ற சக்திகள் நிலைப்பாடு எடுத்ததற்கும் அடிப்படை வேறுபாடு நிறைய உண்டு.இன அழிப்பை நிகழ்த்துவது இந்திய மய்ய அரசின் அதிகார மய்யமும் காங்கிரசின் தலைமையும் என்ற அடிப்படையில் கவனமாக எடுத்து வைக்கபட்ட நிலைப்பாடு.வேறு வழியே இல்லை காப்பாற்ற வேண்டிய கரங்கள் தொடர்ந்து தடை போடுகிறது.பெ.தி.க.கடுமையாக ஒடுக்கப்படுகிறது.ஏராளமான தோழ்ர்கள் சிறையில்.தலைவர் தே.பா.சட்டத்தில் கைதாகி விடுதலை செய்யப்படுகிறார் அடுத்தப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் கைதாகி உள்ளே செல்கிறார்.இன்னொரு பொதுச்செயலாளர் சோனியாவின் வ்ருகைக்காக உள்ளே தள்ளப்படுகிறார்.கைது செய்யப்பட்டதற்கோ தோழர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காகவோ எள்ளளவும் எதிர் நிலை எடுக்கப்படவில்லை,தன் ஆட்சியைக் காக்கவேண்டி ப்ன்னனியை திருப்திப்படுத்தவேண்டி இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்ததற்குகூட கவலை இல்லை.மாறாக,போராட்டம் நடத்தி மய்ய அரசு இன அழிப்பு நிகழ்த்துவதற்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்கிற அவசர செயல்கள்தடுக்கப்பட்டபோதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் மற்ற சக்திகள் இதே சிக்கலில் தங்களது குரலை கவனமாகப் ப்திவு செய்தன.ஏழ் வுடுதலைக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கையை ஒரு அரசியல் கட்சியின் அபிலாசைஎனும் கோணத்தில் கொண்டு சென்றன.உண்மையில் அது வெறும் ஓட்டுக்காண தந்திரமாகத்தான்பட்டது.ஆதரவு சக்திகளாகப் புறப்பட்ட சக்த்திகளின் ஆதரவில் இருந்த ஆபத்து:
1) அவர்கள் தீர்வாக ஈழ்த்தை ஒருபோதும் சொல்லவில்லை.
2) ஈழவிடுதலை என்பது இந்திய மேலாண்மைக்கு விடப்படும் சவால் என்பதே மய்யாதிகாரமய்யத்தின்(பார்ப்பன) எப்போதும் மாறாத நிலை.எனவே எக்காரணம் கொண்டும் ஈழ் விடுதலையை இந்தியப் பார்ப்பன அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.எனவே பார்ப்பன அதிகார மய்யம் எதிர்க்கப்படாமல் அதன் நடவடிக்கையின் பின்னனி வெட்ட வெளிச்சம் ஆக்காமல் அதேசமயம் இதற்குப் பாற்ப்பனப் பின்னனியை ஆதரவுக்கு அழைத்தது( பார்ப்பனச்சங்கம் இலங்கைத்தமிழ்ர் ஆதரவு என்ற நிலைப்பாடு)போன்றவை.
3) பார்ப்பன பாரதியைப் புகழ்ந்துகொண்டே திராவிடர்,திராவிட பத எதிர்ப்பை முன்னிறுத்தும் சீமானின் ஈழவிடுதலை ஆதரவு.
4) மறைந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில் அதை எதிர்த்த எல்லோரும் கடுமயாக சிறைக்குள்சித்திரவதை அடைந்தனர்.ஆனால் அதே அளவு எதிர்ப்பை முன் வைத்த ‘சோ’ என்கிறைரட்டை நாக்குப் பார்ப்பான் எந்தவொரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் அதே சமயம் நெருக்கடியை எதிர்த்த வீரனாக வலம் வந்தான்.
அதே போல பெ.தி.க.த் தொண்டர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில்(சீமானும் அப்போது பெ.தி.க. மேடைகளில் பேசித்தன் உள்ளே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது) தே.பாதுகாப்புச் சட்டமும் வழக்குமாக அலைந்து கொண்டு இருந்த நேரத்தில் நெருக்கடியையே சந்திக்காத மற்ற சக்திகள் பார்ப்பன இந்து சனாதானிகளின் ஆதரவைத்திரட்டின.அவர்களும் தந்தனர்.இந்திய தேசியத்தில்தான் சிக்கல் என்பதை உரத்துச் சொல்ல வழி இல்லாமல் அகண்ட பாரதம் காக்கும் இந்துத்வாவாதிகளிடம் கை கோர்த்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய நிகழ்வு.
இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால் ஈழச்சிக்கல் பார்ப்பனஆதரவோடு ,அவர்களோடு கலந்து எதிர் கொள்ளும்போதே பார்ப்பனச் சிக்கலைஅதாவது இங்குள்ள மற்றும் ஈழச்சிக்கலில் யார் எதிரியோ அதை அதாவதுப் பார்ப்பன- அதிகார மய்யத்தை ந்ம் கண்ணுக்கு மறைத்து தமிழர் சிக்கல்களை பார்ப்பன அமைப்புகளிடம் ச்மரசமாகத் தாரை வார்ப்பத்ற்கான முன்னோட்டம்தான் இது.
மலேசியாவில் தமிழர் சிக்கல் எப்படி இந்திய,இந்துச் சிக்கலாயிற்று என்பதற்கான வரலாறு நமக்குத் தெரியவில்லை என்றாலும் அதற்கான வழி என்ன என்பதை எந்நிகழ்வுகள் நமக்குக் காட்டுகிண்றன.
அதனால்தான் பார்ப்பனச் சிக்கல்தான் ஈழவிடுதலையின் தடைக்கல் என்பதையே சொல்லாமல் தமிழினத் துரோகம்தான் எனக் கூறுவதன் பின்னனி இதுதான்.
இந்தியவின் இருக்கமான மௌனம்தான் ஈழ் இன அழிப்பின் பின்னனி என்பதுதானெ உண்மை.மய்ய அதிகாரத்திற்கு நெருக்கடி ஏற்ப்டுத்தும் பார்ப்பன எதிர்ப்பு,இட ஒதுக்கீடு போன்றவறை எப்போதுமே ஒழுங்காகக் கூறாமல் எங்களுக்கும் அந்தக் கொள்கை உண்டு எனக் காட்டி அதே சமயம் பார்ப்பன எதிர்ப்பை உருக்குலைக்கும் வேலையைச் செய்து கொண்டு தமிழினத்துரோகம் என்ற பதத்தால் இவற்றை மறைக்கும் நிகழ்வுகள்தான் அரங்கேறி வருகின்றன.
இது போன்ற மாய வலைகளில் நம் பெரியார் தொண்டர்கள் தங்களை இழந்து பார்ப்பன் எதிர்ப்பைக் குறைத்து வெறும் தமிழினத் துரோகிகள் எதிர்ப்பு எனும் நிலை எடுத்தால் அது பார்ப்பன ஆதிக்கச் சக்திக்கு ஆதரவாகப் போய்விடும் என்பதோடு கொதிக்கிற எண்ணைச் ச்ட்டியிலிருஎது எரிகிற அடுப்பில்வீழ்ந்த கதைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தோழர்களே! என் மனதுக்குப் ப்ட்டதை எழுதித் தொடங்கியுள்ளேன். இதை விமர்சனத்துக்கு உட்ப் ப்டுத்தி மற்றதோழர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.!!!!
இவண்,
மௌ.அர.சவகர்,
பழனி.

Thursday, April 30, 2009

பகுத்தறிவின் பதில்

ஆதிக்கசாதியில் பிறந்தவன் தனது சொந்த சாதியின் ஆதிக்கத்தை எல்லாத் தளங்களுலும் எதிர்த்து போரிட்டால்தான் மக இக போன்ற அமைப்புகளில் இருக்க முடியும்... இது ஜெயா போல என நினைக்க வேண்டாம்... களப்பணி பற்றி பேச எந்த பெரியாரியல் சிந்தனைவாதிகளுக்கும் தகுதி இல்லை
நமது பதில்:---
நான் முதலில் கூறியபடி முக்கிய முரண்பாட்டை கவனிக்காமல் அல்லது எதோ பதில் சொல்ல வேண்டும் என்ற வேகத்தில் வரும் விமர்சனங்களாகத்தான் எமக்குப் படுகிறது.பார்ப்பான் என்பவன் சாதி அல்ல.மாறாக அவர்கள் ஒரு இனம்.சொந்த சாதிக்கு எதிரான நடவடிக்கை பெரியார் மற்றும் பெரியார் இயக்கம் செய்யாத புதிய நடவடிக்கை எதாவதை ம.க.இ.க. கண்டுபிடித்துள்ளதா அய்யா? 1925 முதல் பெரியார் இயக்கம் செய்யாத சாதிக்கு எதிரான சுய நடவடிக்கைகளை வரிசைப் படுத்துங்களேன்.
அதற்குப் பின் களப்பணி பற்றி பேசுவோம்.யாருக்கு யோக்கியதை உள்ளது என்று..


April 26, 2009 11:08 PM
rasa said...
இந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே எனச் சொல்லுவதற்கு தகுதி மக இக காரனுக்குத்தான் உண்டு. நீங்கள் பத்தாண்டுகளுக்கு பிறகு கோயில் நுழைவை போராட்டமாக்கிய போது அந்த கருவறையில் நுழைந்து திருவரங்கநாதனை தீட்டாக்கி இந்து என்பது நம்மை அடியாளாக்கி மசூதியை இடிக்கத்தான் என்று அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள்... அன்று உங்கள் தலைவர்கள் நக்கிக் கொண்டிருந்தது பாப்பாத்தி யின் போயசு தோட்டத்து காலை...
நமது பதில்:----
அடேயப்பா!!1 என்ன கொடுமை அய்யா.ஏனென்றால் எங்களுக்கெல்லாம் வரலாறு தெரியாது ஏதோ ம.க.இ.க.காரன் சொல்லித்தான் எங்களுக்குத்தெரிகிறது.அடக்கொடுமையே போ!
வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?
1922 - ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரஸ் மநாட்டில்கோவில் நுழைவு,பொது உரிமைகள் வேண்டும் என்று தீர்மானம் பெரியாரால் கொண்டுவரப்பட்டது.[ அப்போதே எங்கள் ம.க.இ..க.காரந்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்லிவிடுங்களேன் ]
1924 - ஆம் ஆண்டு கேரளாவில் திரிவிதாங்கூர் சமஸ்த்தானத்தில் இருந்த வைக்கத்தில் கோவில் தெரு வழியாக தலித்துகள் நடக்ககூடாது என்பதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றவர் பெரியார்.
1925 - ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக அப்போது திருவிதாங்கூர் சஸ்தானத்திற்கு உட்ப்பட்ட சுசீந்திரத்தில் தீண்டப்படாதோர் கோவில் நுழைவு கிளர்ச்சி அவ்வாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி நடை பெற்றது.
”சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்.
தமிழ்நாட்டினர் ,வைக்கம் சத்தியாகிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும்,ஆட்கல் உதவியும் ஒத்தாசையும் செய்தார்களோ அவ்வாறே சுசீந்திரம் சத்யாகிரகத்திற்கும் தாங்கள் நன்கொடை அளித்தும் ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறேன்”
பெரியார் - குடியரசு 31.01.1926.
1927 - ஆம் ஆண்டு ஜே.என்.இராமநாதன் தலைமையில் பல தாழ்த்தப்பட்ட தோழர்கள் திருச்சி தாயுமானவர் கோவிலில் நுழைந்தனர்.அவர்கள் மலைக்குப் படியேறிச் சென்றபொழுது பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரவுடிகளால் அடித்து தள்ளப்பட்டு பாறைகளில் உருட்டிவிடப்பட்டனர்.
ஜே.எஸ்.கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலை கோவிலில் நுழைந்தவர்களை கோவிலுக்குள் வைத்துப்பூட்டி விட்டனர்.அவர்கள்மீது வழக்கும் போடப்பட்டது.
1927 - ஆம் ஆண்டு மே மாதம் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அனைத்துச் சாதியினரும் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நுழையச்சென்றனர்.இதைக்கேள்விப்பட்ட கோவில் நிர்வாகிகள் கோவில் நுழைவாயில் மற்றும் கருவறையைப் பூட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.இருப்பினும் ப்க்கவாட்டு கதவுகள் மூலமாக தோழர்கள் கோவிலினுள் நுழைந்தனர்.
அடுத்த ஆண்டு 1928 திருச்சி மலைக் கோட்டையிலும் [25.06.1928],திருவானைக்காவிலும்[12.08.1928] கோவில் நுழைவுப் போராட்டம் நடை பெற்றது.இங்கு தோழர்கள் குண்டர்களால் பலமாகத் தாக்கப்பட்டனர்.
1929 - ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடத் தோழர்களையும் அனுமதிக்கவேண்டும்”என்று தெவஸ்தானக் கமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர பெரியார் முன்னிற்கிறார்.அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்றுவிடுகிறார்.
பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு,குத்தூசி குருசாமி,பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரிவீதி ஈஸ்வரன்,ஈரோடு மசைமேடு பசுபதி,ஈரோடு கிருஸ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தழ்த்தப்பட்டத் தோழர்களை நெற்றியில் திருநீரு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக்கொண்டு சென்று தேங்காய், பழம் , பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தனர்.
இதைக்கண்ட பார்ப்பனர்கள் பொது மக்கள் துணையோடு தோழர்கள் உள்ளிருக்கும் போதே பூட்டிவிட்டனர்.இரண்டு நாட்கல் கதவைத் திறக்க மறுத்து விட்டனர்.அந்த இரண்டு நாளும் நாகம்மையார்தான் அவர்களுக்கு உணவை அனுப்பி வைத்தார்.
பின்னர் பெரியார் வந்தபின் தான் கதவுதிறக்கப்பட்டது.
இது பற்றி குத்தூசியார் கூறும்போது”அந்த இரண்டு நாளும் அன்னை நாகம்மையார் அளித்த உணவு உண்டு பசியாறினோம்.ஆனால் கடவுளான ஈஸ்வரன் தான் பட்டினி கிடக்க நேர்ந்தது”என்றார்.
என்ன கொடுமை இவர்கள் போராட்டம் நடத்திய பின் தான் பெரியாரியக்கம் நடத்தியதாமே!.



April 26, 2009 11:14 PM
rasa said...
இட ஓதுக்கீடு என்பது பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்று கிடையாது.. இப்படி எளிமையாகப் புரிந்து கொள்வோமே...

பாப்பான் மற்ற சாதிகளை ஒடுக்கினான்... எப்படி ஒரு வில்லன் கதாநாயகியை கற்பழிப்பதைப் போல•..அப்படி என வைத்துக் கொண்டால் அதற்கு தரப்படும் நட்ட ஈடுதான் அல்லது மறுவாழ்வுதான் இட ஒதுக்கீடு.. அந்த மறுவாழ்வே அதாவது ஒரு வில்லனுக்கு முன்னால் தானும் ஒரு மனுஷியாக வாழ்ந்து காட்டுவதே அவனுக்கு எதிரான நடவடிக்கை என அப்பேதை நம்பினால் யாருக்கு அறிவு இல்லை..

நான் என்ன சொல்றேன்.. மறுவாழ்வ பாத்துக்கிடலாம்... அதுக்கும் வில்லன கொல்லுறதுக்கும் சம்பந்தம் இல்லங்குறன்... நீங்க என்ன சொல்றீங்க•.. மறுவாழ்வு பத்தி பேசினாத்தான் அல்லது ஆதரித்தால்தான் பெண்கள் விடுதலை ஆவாங்க நீங்களும் நம்ம ஆளு ஆவீங்கங்குறீங்க•..

என்ன பண்றது பகுத்தறிவ
நமது பதில்:------
என்னையா உதாரணம்? சரி அந்தப் பேச்சுக்கே வருவோம்.இட ஒதுக்கீடு என்பது மறுக்கப்பட்ட கல்வி,வேலை,சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பெறுவது.ஆனால் தங்களது உதாரணம் வில்லன் கற்பழிப்பு.இது எப்படி பொருந்தும்?அதாவது உதாரணமாக கல்வி மறுக்கப்பட்டது எனவே அதை திரும்பப் பெறுதல் என்பது அதே உரிமையை மறுபடிப் பெறுதலென்பது சாத்தியம்.ஆனல் தங்களது உதாரணம் கற்பு என்பது போனால் போனதுதான் [ தக்களது உதாரணம் கற்பைச் சொல்லி இருப்பதால்தான் இவ்வுதாரணம் மற்றபடி கற்பு என்பது கற்பனையே ] அது எப்படிப் பெறமுடியும்? அது என்ன உரிமைப் பிரச்சனையா?இல்லையே!அது வன் தாக்குதல் அதை எப்படி உரிமைச் சிக்கலுக்கு உதாரணமாக்கௌவீர்?பார்ப்பான் சிதைத்தது என்பது ஒடுக்குவதற்காக சமூகத்தைப் பிரித்து உரிமைகளைப் பரித்தான்.மாறாக இச்சமூகத்தின்கற்பை அதாவது மீண்டும் பெற முடியாத ஒன்றை அழிக்கவில்லை.
இது ஒன்றும் அகதி முகாம் இல்லைத் தோழரே!மறுவாழ்வு பெற.உரிமைகள் ம்றுக்கப்பட்ட சமூகம்.இடஒதுக்கீடு அவ்வாறு இழந்த உரிமையைப் பெற்றுத்தரும் முறையாகும்.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன அய்யா?பின்னர் படிப்படியாக அமெரிக்க நிறுவனங்களில் கருப்பினத்திற்கு இத்தனை சதம் வேலை வாய்ப்பு மற்றும் விற்பனையாரில் கூட குறிப்பிட்ட சதம் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதே .இதைச் சொல்லக்காரணம் இழந்த உரிமையைப் பெறுவது என்பது மறுபடி பெறவே முடியாத கற்பு அல்ல.நிவாரனமும் அல்ல.
பெண் விடுதலையும் அப்படித்தான் அய்யா. பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி வேலையைக் கொடுப்பது என்பது உரிமைச் சிக்கலா?அல்லது நிவாரணமா?பெண்கள் தாங்கள் இழந்த உரிமை ப்ற்றிய சிந்தனை எப்படி வந்தது?கல்வி மற்றும் சமூக விழிப்புணர்ச்சி வந்ததாலேதானே!அதற்குத் தானே இடஒதுக்கீடு.
என்னதான் பண்றது புர்ர்ர்ரட்ச்ச்ச்சி!!!!

April 26, 2009 11:22 PM
rasa said...
அதிமுக ஒரு திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த்து என்ற உங்களது புரிதலை நினைத்தால் கண்ணைக் கட்டுகிறது...திமுக அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் அளவிலே கூட பலருக்கு நாம் பெரியார் வழித்தோன்றல் என்ற உணர்வு கூட கிடையாது...பெரியாரை அவர்கள் படித்திருக்கிறார்களா என்பதை அண்ணன் அழகிரி, ஸ்டாலின் போன்றோரிடம் கேட்டாலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்...

அதிமுகவில் எவனுக்காவது சாதி ஒழிப்பு பற்றிய பெரியாரது கருத்தும், பார்ப்பனியம் என்ற சொல்லுக்கு அர்த்தமும் தெரிந்தால் என் காதை வெட்டி கீழ வைக்கிறேன்...தயவுசெய்து யதார்த்த்த்தை எடைபோட க்ற்றுகொ கொள்ளுங்கள்....

எனக்கு ஒரு சந்தேகம்... நீங்கள் கொண்டாடும் விபிசிங் உயிரோடு இருக்கும் போதே அவரை மண்டலுக்காக கவிழ்த்த பாஜக உடன் திமுக கூட்டணி போட்டு 5 ஆண்டு அமைச்சரவையிலும் இருந்த்து... அன்று நீங்கள் விமர்சனம் இன்றி திமுக வை ஆதரித்தீர்கள்... இப்போது விபி சிங் செத்த உடன் அவரைப் போற்றுகின்றீர்கள்.. எப்படி பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக உங்களால் இருக்க முடிகின்றது..


இப்போது கூட ஈழத்திற்காக அதிமுக வை ஆதரிக்கின்றீர்கள்... காங் ஐ தோற்கடிக்க வேண்டும் எனச் சொல்லுகின்றீர்கள்... கோவையில் உங்களது மாணவர்கள் பலர் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக வேலை பார்க்கின்றார்கள்... மார்க்சிஸ்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் ஈழம் ஒரு மாநில சுயாட்சி யோடு இருக்கலாம் எனக் கூறும் தனி ஈழத்திற்கு எதிரானவர்கள்....ஜெயா தனது தேர்தல் அறிக்கையில் ராமர் பாலத்தை பாதுகாக்க சேதுசமுத்திர திட்டம் கைவிடப்படும் என்கிறாள்... எப்படி பெரியார் பரம்பரை அவளை ஆதரிக்கின்றது.. இங்குதான் உங்களது பெரியாரய கண்ணோட்டம் என்ற தத்துவத்தை தனது பார்ப்பன பாசிச கண்ணோட்டத்திற்கு இணங்க ஒரு பாப்பாத்தி உங்களுக்கு பெயரளவில் தலைவியாக இல்லாத போதும் தீர்மானித்து விட்டாள்... ஓ... பாப்பான் பின்னால்தானே போகப்பிடாது... பாப்பாத்தி பின்னால பேஷா போலாமே... மாமி உங்காத்துக்கு ராமர் பாலத்தாண்ட தீத்த ஜலம் வச்சிண்டுருப்பா... குடிச்சுட்டு சேம்மா இருங்கோண்ணா..
நமது பதில்:-----
எங்க ஊரில் ஒரு சொல் வழக்கு உள்ளது அதாவது விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு விடுஞ்சு கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்!!என்பது போல் உள்ளது ம.க.இ.க.தோழர் பதில்.
ஜெயலலிதா அ.இ.தி.மு.க.வின் தலைவி இல்லையா?அ.இ.தி.மு.க. என்பது திராவிட இயக்கம் இல்லையா?அப்படியானால் தங்கள்து பார்வையில் திராவிட இயக்கத்திற்கும் திராவிடர் இயக்கத்திற்கும் வேறுபாடு இல்லையா?அப்படியானால் சி.பி.எம்.,சி.பி.அய். மற்றும் த்ங்களது இயக்கம் எல்லாம் ஒன்றா?
என்னய்யா விளக்கம்?திராவிடர் இயக்கத்திலிருந்து வெளியேறிய தோழர்.அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயர் போல் இருந்தாலும் திராவிட முன்னேறக் கழகம் என்று திராவிடர் என்ற ப்தத்தில் “ர்”அய் நீக்கி வைத்ததன் விளைவுதான் பார்ப்பனப் பெண்மணி தலைமைவரை போனது என்று சொல்லி இருந்தேன்.பார்ப்பனசமரசத்திற்காகத்தான் தோழர்.அண்ணா திட்டமிட்டே “ர்’ அய் நீக்கினார்.அதன் விளைவுதான் அனைத்து பகுத்த்றிவு முரண் நிகழ்ச்சிகளும்.விசயம் இப்படி இருக்க என்னவோ ஜெயலலிதா அவர்கள் எங்கள் இயக்கத் தலைவர் போலவும் தி.மு.க. உடன்பிறப்புகள் பகுத்தறிவு பிரச்சாரிகள் என்று சொன்னது போல தாங்களாகவே எழுதிவிட்டு தங்களுக்குத் தாங்களே கைதட்டி மகிழ்ந்து கொள்வது படு ஜோக் அய்யா!
ஈழத்திற்கு ஆதரவு ,ஈழவிடுதலைக்கு ஆதரவுசக்க்திகள் என்றோ காங்கிரஸ் - தி.மு.க.க் கூட்டணிக்கு ஆதரவு என்று பெ.தி.க. முடிவுக்கு வரவில்லை.நன்றாகத் தெரியும் இது தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடும் என்பது.ஹிட்லர் உலகின் ஆபத்தாக வருவான் என்பது தோழர்.லெனினுக்குத் தெரியாதா? அப்படி இருந்தும் ஹிட்லரோடு ஒப்பந்தம் போட்டதன் காரணம் அபோது காப்பாற்றப் படவேண்டியது சோசலிசமே!எனவே எதைக் கொடுத்தாவது சமாதானம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஹிட்லரோடு ஒப்பந்தம் போடப்பட்டது.உலகின் மனித உரிமைக்குச் சவாலாக வளர்ந்து கொண்டிருந்த ஹிட்லரிடம் கை குலுக்கி சோசலிசத்தைக் காப்பாற்றிய தோழர்.லெனினுக்கு அபோது ஒப்ப்ந்தம் போட்டாலும் ஹிட்லரின் பாசிசம் பின்னர் உலகத்திற்கு ஆபத்தாகும் என்பது தெரியாதா?தெரியும் தெரிந்திரிந்தும் கை குலுக்கியதன் காரணம் அப்போதய தேவை சமாதனம் ,சமாதானம்,சமாதானம்.
உலகில் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் ஈழத்தமிழர்க்ள் மீது பயன்படுத்தப்படுகிறதுஅதற்கு எதிராக சுண்டுவிரலைக்கூட அசைக்காதவர்களுக்குப் பாடம் புகட்டத்தான் த.பெ.தி.க.வின் இந்த நிலைப்பாடு அதுவும் கைகுலுக்கி அல்ல.
அவர்கள் அம்மாமி என்பதும் தெரியும் தங்களது புரட்ச்சிகர தேர்தல் புறக்கணிப்பும் தெரியும்.

April 26, 2009 11:39 PM
rasa said...
பாப்பான் சாதி ஒழிப்புக்கு போராட வரலாம்.. ஆனால் முடிவு செய்யும் இடத்துல அவன் இருக்க்க் கூடாது. யாதவர் இருக்கலாமா... இசை வேளாளர் இருக்கலாமா.. மேன்ன் இருக்கலாமா..

இது ஒருவகையான சொத்தைவாதம்... அல்லது நபர்களை வைத்து செயலைத் தீர்மானிக்கும் ஒரு அறிவியலற்ற அணுகுமுறை இது... பிற்பட்ட சேவை சாதிகளில் பிறந்த மேற்குறிப்பிட்ட தமிழினத் தலைவர்கள் பலரும், பல்வேறு தருணங்களில் பாப்பானுக்கு பல்லக்கு தூக்கி உள்ளார்கள்... அவர்கள் தூக்கி கீழே வைத்த பல்லக்கிருந்துதான் பாஜக தமிழகத்தில் காலூன்றியது...

த்த்துவம் நடைமுறையை தீர்மானிப்பது தலைமை தன்னிச்சையாக என உங்களது அமைப்பு போலவே எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள்... கம்யூனிச இயக்கங்களில் அது சாத்தியமுமில்லை...
நமது பதில்:------
யார் வேண்டுமானாலும் இருக்கலாம் பார்ப்பானைத்தவிர .மற்ற பார்ப்பனரல்லாத மக்களில் பலர் பார்ப்பனருக்குப் பல்லக்குத் தூக்கிகள் என்பதே அவர்களுக்குப் பல்லக்குத்தூக்கினால்த் தான் தன் பதவி பணம் ,அந்தஸ்த்து இவற்றைக் காப்பாற்ற முடியும் என்பதுதானே இம்மண்ணின் சுரண்டல் முறை.எனவே அப்படிப் பல்லக்கில் உள்ள பார்ப்பானை அப்படியே அலுங்காமல் தூக்கி தலைமீது தூக்கிவைத்துக்கொள்வதுதான் தங்களது புரட்சியோ!.
கமியூனிச இயக்கங்களில்தானே பூணூலை மறைத்து வர்க்கம் பேசி இந்தச் சமூக அமைப்பு நிலபிரபுத்துவம் , முதலாளித்துவம் எனக்கூறி தலைமைக்குச் செல்லமுடியும் விடாமல் நெருக்கிக்கேட்டால் இல்லை இல்லை இங்கு பார்ப்பன சாதிய ஒடுக்குமுறையும் உண்டு ஆனால் பார்ப்பான்என்று பிரித்துப் பார்க்கத்தேவை இல்லை இடஒதுக்கீடு வேண்டாம் அதுவெல்லாம் சலுகைங்காணும் என்று சமூக விடுதலையை ஒழிக்க முடியும்.சூப்பர் கமியூனிச இயக்கங்கள் அப்பா.

April 26, 2009 11:48 PM
rasa said...
நிலப்பிரபுத்துவம் என்ற வரையறை செய்த்தால் அது சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என கட்டாயம் ஏதுமில்லை... அப்படி பார்த்தால் முதலாளித்துவம் வளர்ந்த நாடுகளில் சமூக மாற்றம் ஏற்பட்டு கம்யூனிசமா வந்துவிட்டதா என்ன•...எப்படி இப்படி எல்லாம் லாஜிக்கே இல்லாம யோசிக்கிறீங்க•.

அசோகர் ஆட்சி பின்னால் திரும்பிப் போக ஆசைப்பட்ட பவுத்த்த்தின் ஆட்சி... அதற்கு பெயர் தேக்கம்... முன்னேற்றமோ புரட்சியோ அல்ல•..

களப்பிர்ர் காலம் பற்றி இவ்வளவு தகவல் உள்ளதா... ஆதாரம் தர முடியுமா...

கல் உடைக்கும் செட்டியாரை.... நாற்றுநடும் சைவ வேளாளனைக் கண்டிருக்கின்றீர்களா....

மலம் அள்ளும் ஆதிக்க சாதியை பார்த்து இருக்கின்றீர்களா...
நமது பதில்:----
லாஜிக் இல்லாமல் யோசிப்பது நாங்கள் இல்லை தோழரே! முன்னால் சோவியத்தில் அரை நிலபிரபுத்துவம்,அரை முதலாளித்துவம் என்கிற நிலையிலிருந்து நேரடியாக சோசலிசம் அரங்கேறியது.சீனாவில் நிலபிரபுத்துவத்திலிருந்து புரட்ச்சிகரமாக சோசலிசம் வந்தது.இதுவெல்லாம் எமக்கும் தெரியும். இதுவெல்லாம் தங்களது கமியூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் சமூகம் பற்றிய பார்வையின் கோளாறே.என்ன நாங்களா உப்ரி உற்பத்தியின் சமூகப் பங்கு என்றெல்லாம் ஃபார்முலா எழுதிஅதனடிப்படையில் சமூகம் தன்னை மாற்றிக்கொள்வது எப்படி என எழுதி உங்களை இம்சை செய்கிறோம்? இல்லையே!தங்களது அடிப்படையில் எந்த மாற்றமும் நடை பெறவில்லை என்பதுதான் உண்மை..அதற்காக மார்க்கியம் சமூக அறிவியல் அல்ல என்று கூறவில்லை.அந்தக் கொள்கை சொன்னதை மீறி சமூக மாறுதல்கள் நடந்துள்ளது சமூக அறிவியல் பார்வை கொண்டவர்கள் ஒத்துக் கொண்டாக வேண்டும்.நிலபிரபுத்துவம் என்றால் சீனாவில் ,முன்னால் சோவியத்தில் நில உடமையாளர்கள்தான் ஆதிக்கவாதிகள்.அச்சமூக அமைப்பு அத்ற்கு ஏற்றவாறு இருந்தது.
அதே சமயம் இங்கு அப்படி இல்லை என்பதைக் கூறத்தான் தங்களது அடிப்படையிலேயே கூறினேன்.அதாவது இங்கு ஆதிக்கச் சக்தி பார்ப்பானே.அப்படி இருக்க அந்தப்பூணூலை மறைக்க சிவப்புச்சட்டை போட்டு நிலபிரபுத்துவம் என்பது ஏமாற்று வேலை இல்லாமல் வேறு என்ன?
இது நிலபிரபுத்துவமாம் ஆனால் இங்கு பார்ப்பன சாதிய ஒடுக்குமுறையாம் .இதில் உள்ள சூது என்னவெனில் பார்ப்பனர் என்பதில்லாமல் பார்ப்பன சாதியஒடுக்குமுறை என்பதன் மூலம் பார்ப்பனரை ஆதிக்கசக்தியிலிருந்துக் காப்பாற்ற எல்லா சாதியிலும்தானே ஆதிக்கச் சக்தியினர் உள்ளனர் எனக்கூறுவதற்கு வசதியாகத்தான் இவ்வார்த்தை.
என்னையா,நிலபிரபுத்துவம் என்றால் இங்கு பார்ப்பானை மீறிய இந்து மதத்தை எதிற்கும் அல்லது லட்ச்சியம் செய்யாத நிலபிரபு அல்லவா இருக்க வேண்டும்? அது இல்லையாம் இங்கு வேறாம் ஆனாலும் அதை அப்படித்தான் அழைப்பார்களாம்.அதாவது ஹீலியம் வாயு கனம் இல்லாமல் இருக்கும் ,எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் என்பதுதான் அதன் வடிவம் இதுதான் என்றால் இவர்களது வாயு கனமாய் இருக்கும்,பெட்ரோலே ஊற்றினாலும் எரியாது ஆனாலும் அது ஹீலியம்தான் ஏனெனில் அது அத்ன் உண்மை குணாம்சம் இல்லாமல் இருந்தாலும் எங்கள் அறிவியல்ப் படி அது ஹீலியம்தான் என்பது போலத்தான் உள்ளது.
உபரி உற்பத்தி தன் வரலாற்றுப் பணியைச் செய்யவில்லை என்பதால்தான் வரலாற்றுத்தேக்கம்.மற்றபடி அசோகர் காலத்திற்குப்பின் திரும்பிப்போக என்பதெல்லாம் வரலாற்றுத் தேக்கம் அல்ல.இல்லை அப்படித்தான் என்றால் அது எப்படி என்பதை விளக்குக.வளர்ந்து வந்த சமூகம் அப்படியே நின்று போனதுதான் தேக்கம் அப்படி இல்லாமல் திரும்பிப் போனது என்றால் அந்த இயக்கம் [சமூக ] எப்படிப்பட்டது?அப்படியே இருஎதாலும் அதுவும் த்ங்களது வரையரைக்குள் வராதே?
கள்ப்பிரர் காலம் என்பது இருண்ட காலம் ,குப்தர் காலம் பொற்காலம் என பார்ப்பனர்கள் புகழுவது எதனால் அய்யா? வேள்விக்குடிச் செப்பேடு நமக்குச் சொல்லுவது என்ன அய்யா?பார்ப்பனரை சம மனிதனாக்கியதுதான் கள்ளப்பிரர் காலம்.
அடுத்து , கல் உடைக்கும் செட்டியாரை.... நாற்றுநடும் சைவ வேளாளனைக் கண்டிருக்கின்றீர்களா....
என்றக் கேள்வி.
அட அதுதானய்யா நாங்கள் சொல்லுவது .இங்கு சாதிவாரியாகத்தான் தொழில் செய்ய முடியும் அதைத்தான் தோழர் பெரியார் ,”மக்களைச் சாதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு சாத்க்கும் இன்னின்ன தொழில் என்று கற்பித்து அந்தத் தொழிலை அந்தந்தச் சாதி தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கிறதான நிர்பந்தம் இங்கு இருந்த்து வருகிறது”.
குடியரசு:-07.06.31
எனவே ஒருசாதியின் தொழிலை வேறு சாதியினர் செய்யமுடியாது.அதே சமயம் எல்லா சாதியினரும் உடல் உழைப்பில் உள்ளனர்.பிள்ளைமாறாக இருந்தாலும் அதி விவசாயக்கூலியாக இருக்கிறான். ஆனால் சமூகவளர்ச்சிக்காண எந்த உடல் உழைப்புமே இல்லாமல் சமூகத்தில் ஆதிக்கவாதியாக உள்ளான் பார்ப்பான் என்பதைக்காட்டத்தான் இவ்வுதாரணம்.
அதை திசைதிருப்பிப் பார்ப்பானைக் காப்பாற்ற தாங்கள் படும் பாடு ……தோழரே பூணூல் பச்சையாக வெளியே தெரிகிறது கொஞ்சம் தாங்கள் அனிந்திருக்கும் சிவப்புப் சட்டையை வைத்து மூடுங்களேன் .. !!1
இங்கு உபரி உற்பத்தி அபகரிப்பில் சாதியின் பங்கு என்ன?
சாதி என்பது யாருக்காணது?
பார்ப்பான் இச்சமூகத்தில் என்ன நிலை?
தேசிய இனப்பிரச்சனையில் தங்களது நிலை என்ன?
இவையல்லாம் விவாதிக்கலாம் ..நன்றி தோழரே!
எனது பிளாக் பெயர் arivunnanayam.blogspot.com .ஆனால் தங்களது பிளாக் கிடைக்கவில்லையே!
இவண் ,
மௌ.அர.சவகர்

Wednesday, April 22, 2009

ம.க.இ.க. தோழர்களுக்கு மட்டுமல்ல

தற்போது ம.க.இ.க.வும் பெரியார் திராவிடர் கழகமும் இணையத்திலும் இதழ்களிலும் மோதத்தொடங்கியுள்ளன.ஆரம்பம் தோழர் மதிமாறனிடம் தொடங்குகிறது. பின் அது படிப்படியாக பெரியார் திராவிடர் கழகம்என்பதிலிருந்து பெரியாரிடம் வந்து சேர்ந்து உள்ளது.வரவேற்கிறோம்.ஏனெனில் இதுதான் ம.க.இ.க.விற்கும் பெரியார்திராவிடர் கழகத்திற்கும்(பெரியார்) உள்ள உண்மையான முரண்பாட்டை வெளிக்கொணரும்.அந்த வகையில் தோழர்.இரயாகரன் அவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.ஏனெனில் அவர்தான் 5 கேள்விகளை முன் வைத்து அதற்கு தங்களதுநிலைப்பாட்டையும் வைத்துள்ளார்.
1) பிறப்பில் பார்ப்பானாகப் பிறந்தவன்பார்ப்பனியத்தை எதிர்த்து போராட முடியாதா?
2) பெரியாரின் பார்ப்பனிய(சாதி) ஒழிப்பு எப்படி எந்த வழியில் சாத்தியமாகும்?
3) பெரியாரியஅமைப்புகள் சாதியை (பார்ப்பனிய) ஒழிப்பை எப்படிநடைமுறையில் வைக்கின்றன?
4) ம.க.இ.க.பார்ப்பனியத்தை எந்த வகையில் ஆதரிக்கின்றது?
5) வி.பி.சிங்கின் அரசியல் என்ன?
இதற்கு அவர்களது நிலைப்பாடு:
1) பிறப்பால் உயர்சாதியில் பிறப்பவன் சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராகப்போராட முடியும்.இதை மறுப்பது சாதிய சித்தாந்ததை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய்ம்தான்.
2) பெரியார் சாதிய சமூக அமைப்பின்மேல் அதை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் மேல் விமர்சனம் செய்தவர்.இதன் மூலம் சமூகத்தை விழிப்புறச் செய்தவர்.இதற்குமேல் சாதியை ஒழிக்க அவரால் வழிகாட்ட முடியவில்லை.
3) பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்கத் திட்டம் கிடையாது.விழிப்புணர்வு பிரச்சாரம் தாண்டி சாதியை ஒழிக்கும அரசியல் திட்டம் கிடையாது.
4) ம.க.இ.க. சாதியை ஒழிக்கும் அரசியல் வழியைக்கொண்டுள்ளது.அது பார்ப்பனியம் என்றால்,அதை எப்படி ஏன் என்று விளக்குங்கள்.இட ஒதுக்கீடுத்திட்டம் ஒரு கொள்கை ரீதியாக வைத்துள்ளனர்.அது தவறு என்றால் ஏன் எப்படி என்று விளக்குங்கள்.
5) வி.பி.சிங் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பின் ஒரு ஆளும் வர்க்க பிரதிநிதி.அரசியல் இருபுக்காக சமூகக் கொந்தளிப்பை தவிர்க்கச்செய்யும் சீர்திருத்தங்கள் சமூகத்தை மாற்றுவது இல்லை


நன்றி தோழரே!
தங்களது எல்லாக்கேள்விகளும் தங்களது நிலைப்பாடும் நமது அடிப்படை முரண்பாடின்மீதே நிற்கிறது.பார்ப்பனர் என்பது த்ங்களைப் பொறுத்தவரை ஒரு உயர் சாதி மட்டுமே.அதாவது நிலபிரபுத்துவத்தின் இந்திய வடிவம் அதுவும் பார்ப்பனர் அல்ல பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை அவ்வளவே. பார்ப்பனர் என்பது நாயக்கர்,கவுண்டர்,வன்னியர்,பிள்ளைமார் போன்ற ஒரு உயர் சாதியினரே இதுதான் தங்களது நிலைப்பாடு.
தங்களது நிலைப்பாட்டின்படி இங்கு ஆளும் வர்க்கம் “அமெரிக்கத் த்லைமையிலான மேல் நிலை வல்லரசுகள்,தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம்,நிலபிரபுத்துவம்”
இதைப்பார்க்கும்முன் முதலாவது கேள்விக்கான பதிலை பார்ப்போம்.
காலகாலமாக அடிமைப்படுத்திவரும் பார்ப்பன சுரண்டல் அமைப்பில் பார்ப்பனர்மீதான நம்பிக்கை துளியும் இல்லை.மாறாக அவர்கள் எமது போராட்டக்களத்துக்கோ அல்லது எமது கொள்கை வழி நடைமுறைக்கு ஊறு விளைவிக்காத ஆதரவோ கொடுத்தால் அதை உபயோகிப்பதில் எந்தத் தடையும்மில்லை.மாறாக இதையே உபயோகித்து மீண்டும் தலைமையைக் கைப்பற்றினால் என்னவாகும் என்ற வறலாற்று ரீதியான அனுபவந்தான் பார்ப்பனரை அமைப்பில் உறுப்பினராக்க மறுக்கிறது.திராவிட இயக்கத்தில் தோழர்.அண்ணாத்துரை செய்த திராவிடர் என்கிற பதத்தில் ‘ர்’அய் நீக்கியும் பார்ப்பனர் எதிர்ப்பு என்கிற பதத்தை ‘பார்ப்பனியம்’ என்றும் மாற்றியதன் விளைவுதான் அந்தத் திராவிட இயக்கத்திற்கு ஒரு பார்ப்பன பெண்மணி தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டது.மேலும் பார்ப்பனியத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் போராடவேண்டும் என்பதுதான் எமது ஆசையே.அப்படிப்போராடுகிறவர்களும் போராட்டக்களத்திற்கே வரட்டும். மாறாக இயக்கத்தை முடிவு செய்ய ததுவதை வடிவமைக்க பார்ப்பனர்கள் தேவையே இல்லை.இதுதான் எமது நிலைப்பாடு.
சரி அடுத்ததாக த்ங்களது ஆதிக்கச்சக்தி பற்றிய நிலைப்பாட்டிற்கு வருவோம்.
ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவம் இதனூடாக நிலபிரபுத்துவம். நிலபிரபுத்துவம் இங்கு என்னவாக உள்ளது? பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை.அப்படியானால் நிலபிரபுத்துவமும் பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றா? இதில்தான் சிக்கல் தொடங்குகிறது.இது நிலபிரபுத்துவம்தானா அல்லது இந்தப்பெயரால் பார்ப்பனச் சுரண்டல் மறைக்கப்படுகிறதா?பார்ப்போமா!
மார்க்கிய அடிப்படையான நிலபிரபுத்துவம்தான் இது சற்று மாறுதலுக்கு உட்ப்பட்டதுஎன்பது போலத்தான் இந்த விளக்கம் உள்ளது.சுமார் 2000 ஆண்டுகளாக ஒரே சமூக அமைப்பாக இருந்த இந்த சமூக அமைப்பு அதாவது எந்த சமூக மாற்றதிற்கும் உள்ளாகாத (அசோகர்,களப்பிரர் ஆட்சிகளில் மட்டும் சற்று அசைந்து கொடுத்தது)சமூகமாக இருந்து வந்தது(வரலாற்றுத் தேக்கம்) தங்களது. கூற்றுபடி நிலபிரபுத்துவம் எனில் என்ன நடந்திருக்கவேண்டும் அடுத்த சமூக மாற்றத்திற்குச் சென்றிருக்க வேண்டுமல்லவா? மாறாக என்ன நடந்தது? எந்தமாற்றமுமே நடக்கவில்லை.ஏன்?
வெள்ளையர் வருகைக்கு முன் 54 தேசங்களாக இருந்த(சமஸ்தானங்களாக) நம் நாடு நிர்வாக வசதிகளில் வேறுபட்டு இருந்தாலும் சமூக அமைப்பால் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.மிகப் பெரும்பான்மையான உற்பத்திமுறை விவசாயம்தான்.மன்னர்களும்,செல்வத்தர்களும் இருந்தனர்.முக்கியமாக சாதி முறை வருணாச்சர்ம அடிப்படையில் நடைமுறையில் இருந்தது.என்ன நடந்திருக்க வேண்டும்? நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகள் உபரி உற்பத்தி அபகரிப்பின் காரணமாக முரண்பட்டு(பகை) மோதி அடுத்தச் சமூக அமைப்புக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லவா?
அது நடந்ததா? இல்லையே.இன்னும் சொல்லப்போனாலஆதிக்க வர்க்கம் தன் மூளைஉழைப்பையும்(யுக்தி) முதலீட்டையும் செலுத்தி உபரி உற்பத்தி அபகரிப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியே வர்க்க மோதலின் அடிப்படை.அதிகார வர்க்க நலனுக்கான யுக்தியும்,வர்க்க மோதலும அடுத்தபடி நிலைக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டுமே!அது நடந்ததா? இல்லையே! மாபரும் வரலாற்றுத் தேக்கம் தானே நிகழ்ந்தது.
ஏன் என்பதை பின்னர் பார்ப்போம்.முதலில் இச்ச்மூக அமைப்பை நிலபிரபுத்துவம் என அழைப்பது தேவை இல்லாத ஒன்று என்பது தெளிவு. அப்படியானால் இது என்ன சமூக அமைப்பு?அதாவது என்ன சுரண்டல் முறை?
இம்மண்ணில் உள்ள சுரண்டல் முறை “பார்ப்பனிய உற்பத்திமுறை”.அது என்ன பார்ப்பனிய உற்பத்திமுறை?
நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் நிலபிரபு !---
முதலாளித்துவ உற்பத்தி முறையில் முதலாளி!---
இவர்கள்தான் பிரதானமாய் உபரி உற்பத்தியை அபகரிப்பர்.உற்பத்திமுறையும் அதற்கேற்றாற் போல் அமைந்திருக்கும்
ஆனால் ந்ம் நாட்டில்???
இன்றும் கூட
கண்டதுண்டா கண்டதுண்டா கல் உடைக்கும் பார்ப்பானைக் கண்டதுண்டா????
கண்டதுண்டா கண்டதுண்டா நாற்று நடும் பார்ப்பனத்தியைக் கண்டதுண்டா????
கண்டதுண்டா கண்டதுண்டா மலம் அள்ளும் பார்ப்பனைக் கண்டதுண்டா????
இல்லையே .இது எதைக்காட்டுகிறது?உடல் உழைப்பில் இச்சமூகம் இல்லாமலேயே சுரண்டலை அமல்ப்படுதி வந்துள்ளது.வருகிறது.ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக சமூகம் தேங்கிக்கிடந்ததாகச் சொன்னோமே காரணத்தைப் பார்ப்போமா!
எந்த ஒரு சமூகத்திலும் ஆதிக்கச்சக்தி தன் சுய லாபத்திற்காக [உபரி உற்பத்தி அபகரிப்பின் அளவை அதிகப்படுத்த] உற்பத்திக்கான யுக்தி,முதலீடு இவற்றில் உயர் நிலை மாற்றம் செய்வர்.
ஆனால் நம் நாட்டில்,விவசாயம்,நெசவு வேலை,மண்பாண்டம் செய்தல் போன்று ஒவ்வொரு தொழிலும் யார் யார் ஈடுபடுவது என்பதை அவர்கள் சாதியே நிர்ணியத்தது.
உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாது பார்ப்பனர்கள் மேலே சொன்ன பொருள் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பதில் முதலிடம் பெற்றார்கள்.அதாவது உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதியே நிர்ணயித்தது.
இங்குதான் நிலபிரபுத்துவம் என்பது பொருத்தமற்ற வார்த்தை என்பது புல்னாகும்.மார்க்கிய கண்ணோட்டத்தில் சாதி கருத்தியல் கூறு[மேல் கட்டு மானம்]ஆனால் நம்நாட்டில் உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதி நிர்ணயித்தபோதே சாதி பொருளியல் கூறு என்றாகி விட்டது[கீழ் கட்டுமானம்]. இதைத் தோழர் பெரியார் மிகச்சரியாக,”மக்களைச் சாதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு சாத்க்கும் இன்னின்ன தொழில் என்று கற்பித்து அந்தத் தொழிலை அந்தந்தச் சாதி தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கிறதான நிர்பந்தம் இங்கு இருந்த்து வருகிறது”.
குடியரசு:-07.06.31
மேலும் உற்பத்திமுறையில் சாதியின் ப்ங்கு பொருளாதாரச் சுரண்டலுக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்தது என்பதைத் தோழர் பெரியார்,”வர்ணாசிர்ம தர்மப்படி இன்னின்ன வகுப்புகளுக்கு இன்னின்ன தொழில்[உற்பத்தி விசைகள்]இன்னின்ன உரிமைகள்[உற்பத்தி உறவுகள்]என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கு இல்லாமல் தடைப் படுத்திக் கொண்டிருக்கிறது.”
குடியரசு :-13.09.31
மற்ற சமூக முறையில் ஆதிக்கச்சக்திகள் உற்பத்துயோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும்.ஆனால் பார்ப்பனிய உற்பத்திமுறையில் அவ்வாறு இல்லை என்பதே மற்ற ஆதிக்கச்சக்திகளுக்கும் பார்ப்பன ஆதிக்கச்சக்திக்கும் உள்ள வேறுபாடு.
பார்ப்பனர்கள் உபரிஉற்பத்தி அபகரிப்பின் ஆதிக்க வகுப்பாய் இருந்து சுரண்டுவதை தோழர்.பெரியார்
”மனிதனாகப் பிற்ந்தவன் எல்லாம் அதாவது எவனாவது தன்னை இந்து என்று சொல்லிக்கொண்டால் அவனை உடனெ பார்ப்பன வரிச்சனியன் பிடிதுக்கொண்டது என்பது போல கால வரையரை ஒன்றுமே இல்லாமல் கர்ப்பந்தரித்தது முதல் சகும் வரை செத்தும் விடாமல் அதாவது கர்ப்ப்மானவரி,சீமந்தவரி,பிள்ளைப் பேறு வரி,தீட்டுக்கழித்தல் வரி,வித்தியாபியாச வரி,கல்யாண வரி,சாந்திமுகூர்த்த வரி சாவு வரி,சாக 10 நாழிகை வரி ,செத்தபின்னால் வரி,செத்தவர் மக்களிடமிருந்து வருசா வ்ருசம் வரி - ஆகிய பல துறைகளில் காலாவதி இல்லாமலும் ஒரு நபரைக்கூட விடாமல் 100க்கு100 பேரிடமும் பணக்காரண் ஏழை என்ற பாகுபாடே இல்லாமல் கொடுப்போர் முட்டாள்தனத்திற்கும் களிமண் மூளைக்கும் தகுந்தாற்போல் வரி கறந்து விடுகிறார்கள்”.
குடியரசு :-09.01.27
இது உபரி உற்பத்தியின் மூன்றில் ஒரு ப்ங்கு.
உபரி உற்பத்தியின் இரண்டாம் பகுதி யாகம்,சடங்கு கோயில் உள்ளீட்ட மூடநம்பிக்கைகளில் விரயமானது அல்லது முடக்கப்பட்டது.
மூன்றாம் பகுதி வரலாற்றுத் தேக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த அரசு அமைப்பு எந்திரத்தைத் தாங்கச்சென்றது.
இந்த வரலாற்றுத் தேக்கத்தை சில அரசுகள் சீர்குலைவை ஏற்படுத்தினாலும்[அசோகர் மற்றும் களப்பிரர் ஆட்சி] சமுதாயத்திற்கு பொருளாதாரமும் அரசியலும் கட்டுப்பட்டு இருந்ததால் அந்த அரசுகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இதையே தோழர்.மார்க்ஸ் ,”எல்லா மக்கள் போராட்டங்களும்,அந்நிய படையெடுப்புகளும்,வெற்றிகளும்,கடும் பஞ்சங்களும் இந்திய சமூக அமைப்பின் மேல்தட்டுப் பரப்பினை மட்டுமே தொட்டன.மேற்சொன்னவை இந்துஸ்தானின் அடுத்தடுத்த செயல்கள் போலவே கடும் சிக்கலாகவும் திடீர் எனவும்,அழிப்பதாகவும் தோன்றினாலும் இதுதான் நிலைமையாக இருந்துவந்துள்ளது”.
[British Rul in India – Karl Markx]
காலனி ஆதிக்கத்தின் போது ,பிரிட்டனின் வருகையால் ,அபோது இருந்த உபரி உற்ப்த்தி அபகரிப்பின் தன்மையோடு காலணியச்சுரண்டல் குறுக்கிட நம் சமூகத்திலும் அரசியல்,பண்பாடு மற்றும் பொருளாதார அரங்குகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தியது.இதனால் அத்திரம் அடைந்த பார்ப்பனர்கள் இயற்கையாகவே அந்நிய சக்திகளின் மேல் இருந்த கோபத்தை பயன்படுத்தியது.1857 சிப்பாய் கலகம்.
“லார்டு டல்ஹெளசியின் சீர்திருத்தங்கள்,ஒரு சிலரான பார்ப்பனருக்கு ஏகபோக உரிமையாக இருந்த கல்வியை நாடெங்கும் எல்லோரும் படித்து ப்யன் பெறும் வண்ணம் பரப்பிய முறையும்,இரயில்,நீராவி எஞ்சின்,தந்தி சாதனம் போன்று முறைகளைப் புகுத்தியமை போன்ற சீர்திருத்த்ங்களையும் கண்டு வைதீக மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள் வெகுண்டார்கள்.இத்தகைய அறிவு வளர்ச்சி,தங்களுடைய ஆதிக்கத்திற்கு எங்கு உலை வைத்துவிடுமோ என்றஞ்சி எதைச் செய்தால் இவைகளை ஒழித்துக்கட்டலாம் என நினைத்து அதைக் கண்டுபிடித்து பாமரம்க்களான,சிப்பாய்களாக இருந்த வைதீக மனப்பான்மையாளர்களை,’உங்கள்சாதியும்,மதமும் ஒழிந்துவிட வெள்ளையன் ஏற்பாடு செய்கிறான்’என்றுகூறி வெள்ளைக்காரர்களை எதிர்க்கச்செய்தனர்.இந்தச் சீர்திருத்த்ங்களும் விஞ்ஞானக்கல்வியும் பரவினால் எங்கே சாதி முறையும் அதையொட்டி அமைந்துள்ள கீழ் சாதி மக்களின் பணிவும்,அடிமைத்தனமும் மாறிவிடுமோ என்ற சுயநல எண்ணதின் பேரில்தான் மற்றவர்களைத் தூண்டினர்.’துப்பாக்கிகளில்க் கொழுப்பை தடவிக்கொடுத்தனர்,என்ற குற்றச்சாட்டிலும் கூட இந்துச் சிப்பாய்களிடம் அது பசு மாட்டுக்கொழுப்பு என்றும் முஸ்லீம்களிடம் அது பன்றிக் கொழுப்பு என்றும் பிர்ச்சாரம் செய்தது.அவரவர்களுக்கு உள்ள மத உணர்ச்சிகளையும் அதனடிப்படையாகப் பிறந்த மூட நம்பிக்கையையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.மேற்கண்ட உண்மைகளைவைத்துப் பார்த்தால்,1857 கிளர்ச்சி வெள்ளையனுடைய ஆதிக்க வாழ்வை எதிர்த்து ஏற்பட்டதன்று என்பதும் அவனுடைய சீர்திருத்தங்களினால் விளைந்த பலன்களை எதிர்த்தே ஏற்பட்டது என்பதும் புலனாகும்”.
தோழர் பெரியார், விடுதலை :-15.08.1957
இதன் பின் செய்த ஒப்பந்தம் என்ன? மத விவகாரக்களில் வெள்ளையன் தலையிடக்கூடாது என்பதுதானே!
அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டும் சமூகம் பெற்ற பிள்ளைகள்ட் என்ற அடிப்படையில் சமூகம் தன் கையில் உள்ளது என்பதால் அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி தனக்குண்டு எனப் பார்ப்பனக் கூட்டம் நிரூபித்தது.
இதன் முடிவாக உருவான வரலாறு பார்ப்பனர்களுக்கும் காலனியத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் கூடல் தொடர்பாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிப் போக்கின்போது இந்த புதிய விளைவின் எதிர் பலன்களை அனுபவிக்க ஒரு வித்தியாசமான தொழில் வியாரப் பிரிவினர் த்ன்றினர்.அவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பனியத்திற்கும் காலனியத்திற்கும்நண்பர்க்ளாய் விளங்கினர்.இந்தப் புதியவிளைவின் நேரானபலன்கள்[Positivi] சமுதாயத் தேக்கத்திற்குஅபாயகரமாக அமைந்தது.இத காரல் மார்க்ஸ்,
”இங்கிலாந்தின் குற்றங்கள் எவையாக இருந்தாலும் இந்திய சமூக அமைப்பில் ஒரு அடித்தளப் புரட்சியைக் கொண்டு வருவதில் வரலாற்றின் சுய நினைவற்ற கருவியாக இங்கிலாந்தும் செயல்பட்டது.”
[The Biritish Rule in India]
சமூகத்தேக்கத்திற்கு அபாயமக உருவெடுத்த இந்த புதியபலன்களின் நடைமுறை வளர்ச்சி தமது ஆதிக்கத்திற்கு ஆபத்தாகிவிடும் என பயந்தனர்.அவர்கள் எதிர் பார்த்தது போலவெ உருவானதுதான் நீதிக்க்ட்சி.எனவேதான் ஊடகங்கள் அனைத்தும் நீதிக்கட்சியை வெள்ளையன் அடிவருடி எனப் பிரச்சாரம் செய்தது,செய்தும் வருகிறது.
மேலும் காலனிய பாதிப்பால் இங்கு முளைவிட இருந்த தேசிய இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறியபார்ப்பனர்கள் இந்த்திய தேசியத்தை உருவாக்கினார்கள்.இந்தத்தேசியத்திற்கு புதிதாக உருவான வியாபாரப்பிரிவினர் ஆதரவும் தந்தனர்.உண்மையான தேசிய இயக்கங்கள் முதலில் பார்ப்பனியத்திற்கு எதிராக முளைவிட்டாலும் இறுதியில் காலனியத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால் காலனியவாதிகள் ‘இந்திய தேசியத்தையே’ விரும்பினர்.எனவே பார்ப்பனிய காலனிய நலன்களுக்குப் பாலமமைக்கும் முயற்சியாக இந்திய தேசியக் காங்கிரஸ் உருவானது.
இருந்தாலும் தவிர்க்க இயலாமல் ஏற்பட்ட உபரி உற்பத்தி அபகரிப்புப் போட்டியால் வரலாற்றுத் தேக்கம் அரிக்கப்பட்டதன் காரணமாக சாதி எதிர்ப்பு பார்ப்பனர் எதிர்ப்பு மற்றும் உண்மையான தேச மற்றும் சோசலிச இயக்கங்கள் உருவெடுத்தன. சமுதாயத் தேக்கத்தின் பொருளியல் அடித்தளம் அரிக்கப்படுவதைத்தடுக்க’இந்திய தேசியவாதிகள்’மேற்கொண்ட சூழ்ச்சியே இந்திய தேசிய விடுதலயாக சித்தரிக்கப்பட்டது.
இந்தப் பார்ப்பன ச்ரண்டலை மறைத்து நிலபிரபுத்துவம் எனகூறுவது யாரைக் காப்பாற்ற?
இல்லை இல்லை நாங்கள் பார்ப்பனிய சாதியஒடுக்குமுறையைத்தான் கூறுகிறோம் என்றால் இந்தப்பதத்தை உபயோகிக்க வேண்டியதுதானே?அப்புறம் என்ன நிலபிரபுத்துவம் என்ற வார்தை?????
சரி தற்போது………..
தற்போதும் சமூகத்திற்குக் கட்டுப்பட்டே அரசியலும் பொருளாதாரமும் உள்ளது.
1947க்குப் பின் அதிகாரம் முழுமையாக பார்ப்பனர்களுக்குப் போய் சேர்ந்தது.அந்த வியபாரப்பிரிவினர் இந்திய தேசிய்ம் காக்கும் முதலாளிகள் ஆயினர்.அதாவது இந்தியதேசிய முதலாளிகள் ஆயினர்.அதுவரை பிரிட்டன்மட்டுமே இந்நாட்டைக் கொள்ளை அடித்துவந்த அந்நியதேசம் என்பதுமாறி பன்னாட்டுச் சக்திகளும் களம் இறங்கின.[இந்திய விடுதலையில் அமெரிக்காவின் ஆர்வம்,நேருவின் அமெரிக்க நட்பு] எனவே இங்குபார்ப்பன-இந்திய தேசிய-பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை என வடிவம் பெற்றுள்ளது.
இதிலும் பிரதானமாக பார்ப்பனரே உள்ளனர்.இந்தப் பார்ப்பனகட்டமைப்பின் மேல் அமர்ந்துள்ள மற்ற ச்ரண்டல் அமைப்புகளும் தாங்களது பாதுகாப்பு என்பது பார்ப்பனக் கட்டமைப்பின் வலிமையைப் பொறுத்ததே என உணர்ந்துள்ளதால்தான் ஆரம்பத்தில் காக்கிரஸுக்கு கொடுத்து வந்த ஆதரவில் பெரும்பான்மையை பி.ஜே.பி. போன்ற நேரடி பார்ப்பன அமைப்புக்குத் தருகின்றனர்.இந்த அரசு அமைப்பில் பார்ப்பன ஏகபோகம் இருப்பதுதான் நல்லது என்பதால் இடஒதுக்கீடு என்றவுடன் தகுதி திறமை எனக்கூச்சலிடுகின்றனர்.இந்தப்பார்வையோடுதான் இட ஒதுக்கீடு,வி.பி.சிங் மற்றும் மண்டலைப் பார்க்க வேண்டும்.அரசு அதி காரங்களில் ஏற்படும் பன்மைத் தன்மை என்பது ஆதிக்கதிற்கு ஆப்பு வைக்கும் என்பதாலேயே மண்டலைக் குழி தோண்டிப் புதைக்கத்துடித்தனர்.மண்டலுக்கு எதிராக நடந்த யத்திரை மீண்டும் சிப்பாய்கலகத்தை நினைவுபடுத்துகிறது.பார்ப்பனருக்குப் பாதகமான சூழல் வெள்ளையரால் ஏற்படுவதைத் தடுக்க எப்பட் சிப்பாய்க் கலகமோ அதைப்போலத்தான் அத்வானியின் ரத யாத்திரை.மதம் கையில் எடுக்கப்பட்டவுடன் தமிழகம்,உ.பி.,பீகார் தவிர்த்து இந்தியா முழுதும் ராமன் உயர்த்திப் பிடிக்கப்பட்டான்.மண்டல் மண்ணைக்கவ்வியது.ஆனாலும் அதன் விளைவுகள்பார்ப்பன ஏகபோகத்தை அகில இந்திய அளவில் வெளிக்கொணர்ந்தது.
தற்போதுதனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்ற நிலைபாடு அரசியல் தளங்களில் பிரதிபலிக்கக்காரணம் மண்டலேஇந்த மண்டல் அறிக்கையை வி.பி.சிங்.வந்துதானே அமல்ப்படுத்தினார்.அதுவும் அரையும் குறையுமாக- காரணம் என்ன.பார்ப்பன நெருக்கடி.பார்ப்பனிய சமூக அமைப்பின் ஆளும் வர்க்கப் பிரதிநிதி ஒருக்காலும் அர்சு அதிகார மய்யத்தின் ஆளும் சக்தியை ஒரு போதும் பார்ப்பனர்களிடமிருந்து பிரிக்க அதற்கு முயற்சி செய்யவே மாட்டார்கள்.அப்படியிருக்க வி.பி.சிங் ஏன் அதைச் செய்ய வேண்டும்?
மேலும் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் சம்மம் இல்லை. மாறாக ஒருவர் மீது ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.மேலே இருப்பவன் பார்ப்பான்.அடுத்தடுத்துள்ள மக்கள் படிப்படியாக உரிமை இழந்துள்ளனர்.சம்மில்லாம்லும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டும் அதேசமயம் தனக்குக்கீழ் உள்ள சாதியினரின் ஒடுக்கலுக்கு துணையாகவும் இருந்து வருகின்றனர்.அவர்கலது விடுதலையில்தான் தம் விடுதலை என்பதை உணராமலும் உள்ளனர்.இது பிற்படுத்தப்ப்ட்டவருக்கு ம்ட்டும்ல்ல தலித்துகளுக்கும் பொருந்தும்.எனவேதான் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெறுகிறது.இந்திய தேசிய அரசியலில் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் எப்போது வந்தது?மண்டலுக்குப்பின்னர்தானே? 30 வருடங்களுக்கு முந்தைய அரசியலும் தற்போதைய அரசியலும் எவ்வளவு மாறுட்டுள்ளது.மாயாவதி என்கிற தலித் பெண்மணி அதுவும் உ.பி.ல் முதல்வர் ஆவது எப்படி சாத்தியம் ஆயிற்று?அவர் பார்ப்பனரோடு சமரசம் வைத்தலும் ஒரு தலித்தை தத்லைமை எற்க பார்ப்பனச்சமூகம் அக்கீகரித்து இருக்குமா?சமூகக் கொந்தளிப்பை தவிர்க்க வி.பி.சிங். இதைச்செய்தார் என்றால் அப்போது இருந்த சமூகக் கொந்தளிப்பு என்ன கொந்தளிப்பு?அவர் அரசியல் இருப்புக்காக இதைச் செய்தார் என்றால் - உண்மையைச் சொல்லப்போனால் அதற்குப்பின்னர்தானே அரசியலிலேயே அவர் காணாமல்ப் போனார்.
மேலும் எனக்கு தரக்கூடாது என்று தடுக்கப்படுகிற விசயம் என்பது என்னுடைய உரிமையா அல்லது சலுகையா? கல்வி என்பதும் சமூக சமம் என்கின்ற உரிமையும் என்னுடைய உரிமைதானே?நான் சலுகை கேட்டால் அது சீர்திருத்தம் ஆனால் நான் கேட்பதோ உரிமை அது சமூக தலைகீழ் மற்றம்.நான் ப்றைதான் அடிக்க வேண்டும் என்பதை மாற்றி கலெக்டராக அமர்வது பார்ப்பனச்சமூக அமைப்பில் தலை கீழ் இல்லையா?நான் பனைதான் ஏற வேண்டும் என்பதை மாற்றி தாசில்தாராக அமர்வது சமூக மாற்றமில்லையா?நான் சூத்திரனாய் கஞ்சிக்கலையத்தோடு வயல்காட்டு வெள்ளாளனாய் திரிந்த நான் ஆலய அதிகாரியாக இருப்பது இந்தப் பார்ப்பனச் சமூக அடையாளதை அடித்துப்புரட்டிப் போடுவது இல்லையா?நான் செருப்பு தைப்பதை மாற்றி ஆர்.டி.ஒ.வாக இருப்பது சமூக மாற்றமில்லையா?
இந்தச் சமூகம் தங்களது வர்க்கப் புரட்சிவரை மாறாமல் அப்படியே இருக்க வேண்டுமா?அப்படி மாறாமல் இருந்தால்தான் சரி இல்லையென்றால் நான் இந்தத் தரகு முதலாளித்துவ அமைப்பின் அங்கம் அல்லதுஎடுப்டி அப்படிதானே தோழரே?
இதற்கு இடஒதுக்கீடு தேவை இல்லையா?அதுவும் பிற்படுத்தப்பட்டவருக்குத் தேவையே இல்லையா?
தங்களது இடஒதுக்கீட்டுக்கொள்கையை ஒருத் திட்டமாக வைத்துள்ளீர்கள்.அது தங்களது வெளீயீடான ‘சாதி தீண்டாமை ஒழிப்பு:நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’என்ற புத்தகத்தின் அடிப்படையில்தானே உள்ளது? அதை நிரூபிக்கும் வகையில் தங்களது புதிய ஜனநயகத்தில் பெ.தி.க.மீதான விமர்சனம் வந்துள்ளது.அதாவது “அரசு ஒடுக்குமுறை எந்திரத்தில் இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராடுவதில்லை.அதே சமயம் ,பார்ப்பன மேட்டுகுடி கும்பல் இடஒதுக்கீட்டினை எதிர்ப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.”
பு.ஜ.ஏப்ரல் 2009
அதாவது இடஒதுக்கீடு இருந்து தொலையட்டும்.அது ஒரு பெரிய விசயம் அல்ல.ஆனால் அதை எதிர்க்கும் குரல் வந்தால் கடுமையாக எதிப்போம்.ஏனெனில் அது ஒரு சலுகையே.இதுதானே தங்களது நிலைப்பாடு.மேலும் அக்கட்டுரையில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பார்ப்பன - மேட்டுக்குடியினரின் சாதிச் சண்டை என எழுதி தங்களது நிலைப்பாடு அப்புத்தகதிலிருந்து மாறுபடவில்லை எனக்காட்டியுள்ளீர்க்ள்.சரி அதனடிப்படையி ஏற்கனவே கேட்க்கப்பட்ட கேள்விகளை த்ற்போது மீண்டும் வைக்கிறேன்.ஏனெனில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களினொற்றுமையை வளர்ப்பதற்கான வழி முறையை பின்பற்றாமல் அவர்களின் மோதலைத் தூண்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் ம.க.இ.க.விடம் சில கேள்விகளை முன் வைக்க வேண்டியுள்ளது.
1) தீண்டாமை இழிவுதொழில் அடிப்படையில் வந்ததல்ல- அம்பேத்கார்.ஆனால் ம.க.இ.க.வின் நிலைப்பாடு ‘தீண்டாமை இழிவுத்தொழில் அடிப்படையில் ஆனது’என்பதாகும்.
2) தாழ்த்தப்பட்டோர்மீதான அடக்குமுறை கொடுமைகளுக்கு ‘ஆதிக்க வெறியையும்,அதிகாரத் திமிரையும் இவர்களுக்கு வழ்ங்கியது தீண்டத்தக்க சாதி இந்துக்கள்தான்’என்கிறதும.க.இ.க. அப்படியானால் இங்கு சமூக ஆதிக்கவாதி யார்?
3)’அனைத்து ஆதிக்க சங்கஙக்ளையும் தடை செய்துவிட்டு தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்து விட்டால் தீண்டாமை மறைந்துவிடுமா?சாதி ஒழிந்து விடுமா?
4)தீண்டாமைக் குற்றம் புரியும் நபர்களை மட்டிம் தண்டிக்காமல் அவர் சார்ந்த சாதியின் இடஒதுக்கீட்டை ரத்து செய்தால்தீண்டாமைக் குற்றம் அதிகரிக்குமா?குறையுமா?
5)பார்ப்பனர் ஒடுக்குமுறையும் சூத்திரர் ஒடுக்குமுறையும் ஒரே பார்வையில் பார்ப்பதுதான் நாணயமா?
6)ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் தீண்டாமையை ஒழிக்க வழி கூறாமல் 50 ஆண்டுகளாக உள்ள இட ஒதுக்கீட்டை ஒழிப்பதன் மோலம் தீர்வு ஏற்படுமா?இடஒதுக்கீடோ சாதிச் சங்கங்களோ இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பு சாதி ஒடுக்கு முறையே இல்லை என்று ம.க.இ.க. கூறுகிறதா?அடுத்த வேளை கஞ்சிக்கு இல்லாதவன் கையில் அரிவாளுடன் சாதி வெறி பிடித்து நிற்க வைப்பது எது?
7)‘தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பதுதீண்டாமைக்குக் காரணம் சாதி,சாதிக்கு ஆதாரம் இந்து மதம்.எனவே தீண்டாமையை ஒழிக்க வேண்டுமாயின் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என முழங்காமல் ‘இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.,சங்கராச்சாரிகளின் உள்நோக்கத்தோடு ஒத்துப் போகிறதே?இது சரியா?
8) ‘இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த்ங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமை ஒழிப்புக்கு தீர்வாகாது’என்று கூறும் ம.க.இ.க. தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா?எதிற்கிறதா?
9)சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் பிற்ப்டுத்தப்பட்ட்வரிடம் மட்டுமே உள்ளதா? தாழ்த்தப்பட்டவர்களுக்குள் உள்ள -ஒடுக்குமுறையில் தங்கள் மீது பிற்படுத்தப்பட்டோர் செலுத்துவதற்கு கொஞ்சமும் குறைவில்லாதஒடுக்குமுறை தீண்டாமைக்குள்- தீண்டாமையை எக்கண் கொண்டு பார்க்கிறது?இல்லை அப்படி இல்லை என்கிறதா?
10)’இழி தொழில் செய்வதால் தலித்துகள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் - ம.க.இ.க. அப்படியானால் பாபு ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தபோதே பார்ப்பனரால் இழிவுபடுத்தப்பட்டது எதனால்?
[ தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையைஎவ்வளவுதூரம் வலியுறுத்துகிறோமோ அதைவிட அதிக அளவு தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக எங்களது போராட்டம் உள்ளது.அதில் எமது தோழர்கள் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளானதும் சமீபத்திய நிகழ்வு.]
அடுத்ததாக சாதி ஒழிப்பில் பெரியார்.
சாதியின் இருப்பு எதில் உள்ளது அய்யா?ஒன்று சாதியை தானே ஏற்றுக் கொள்வது மற்றொன்று அகமண முறை.முதலாவதாக சாதியை நானாக மறுப்பது.அது எப்படி சாத்தியம்?அது சம அனுபவம் மற்றும் சம நுகர்ச்சியில்தான் நானும் சமமான மனிதன் என்ற உணர்ச்சிவரும்.பெரியார் காலத்திலிருந்து ஆரம்பத்தில் பெரியார் தொண்டர்களால் ஆலய நுழைவு நடத்தப்பட்டது.ஆனால் பிற்காலத்தில் தன்னெழுச்சியாக ஆலய நுழைவு தலித் இளைஞர்களால் நடத்தப்படுகிறதே அது எப்படி?இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி கற்கப் போகும் தலித் மாணவர்கள் சம்மம் என்பதை உணர்ந்து ஆலய நுழைவு என்பது எனது உரிமை என்ற முழக்கத்துடன் செல்கிறான்.அது மட்டுமல்ல அவனது சாதி அடையாளங்கள் இழிவானவை என்றால் அதையும் அகற்றுகிறான்.இந்த நிகழ்வுகள் சாதிஒழிப்பின் கூறா இல்லையா?இது எதனால் விளைந்தது?படித்து வேலைக்குச்சென்ற தலித்துகள் தங்களது சாதி சார்ந்த இழி தொழிலை மறுப்பது மற்றும் கிராம்ங்களை விட்டு வெளியேறியவர்கள் த்ங்களது சொந்த ஊருக்கு வரும்போது தன் சமூக இளைஞரிடம் சமூக சிந்தனையை ஊட்டுவது[இமானுவேல் அவர்கள் இராணுவ்த்தி பணி புரிந்தபோது ஊருக்குவரும் போதெல்லாம் இளைஞர்களிடம் சுய மரியாதையை ஊட்டிவந்தார் என்பது வரலாறு ]இது போன்ற உதாரணங்கள் நிறைய முன் வைக்கலாம். எனவே இட ஒதுக்கீடு என்பது தானாக ஏற்றுவந்த சாதியத்தை மறுப்பது என்பதன் சமூகத்திட்டம்.
அடுத்ததாக மணமுறை.புற மணமுறை என்பது பெரியார் காலத்திலிருந்தே கட்சியின் நடைமுறை.இன்னும் சொல்லப்போனால் கட்சி மாநாடுகளில் பெண் கொடுத்து பெண் எடுத்துள்ளனர்.இது எதைக் காட்டுகிறது? புற மண முறை என்பது பெரியாரால் பெரியாரியக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைத்தான்.விதவைத் திருமணம்,சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளான சமூகத்தில் பெண் எடுக்க வேண்டும் என்ற உறுதியும் நடைமுறையும் இருந்து வந்ததுஉதாரணம் [குத்தூசி குருசாமி]
நிலை இப்படி இருக்க பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அடிப்படையில்லாக் கொச்சைப்படுத்தும் குற்றச்சாட்டு.சரி தங்களது இயக்கத்தில் சாதி பற்றிய விளக்கம் என்ன?சாதி ஒழிப்புக்காண திட்டம் நடைமுறை என்ன?எதையுமே சொல்லாமல் பெரியார் மீது கூசாமல் கொச்சைப்படுத்துவது எதன் அடிப்படையில்?
இறுதியாக,ஆதிக்கச்சக்தியில் பார்ப்பனர் உண்டா இல்லையா என்பதில் குழப்பமான - பார்ப்பன சாதிய ஒடுக்குமுறை -என்பதுஅதையும் ஒழுங்காகச் சொல்லாமல் நிலபிரபுத்துவம் என க்கூறுவதனடிப்படை பார்ப்பனர் என்ற விசயத்திற்கு நிலபிரபுத்துவ சட்டை போட்டுக் காப்பாற்றுவது,சமுக அடிப்படையில் இட ஒதுக்கிடா என்றால் இல்லை தலித்துகளுக்கு வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம் பிற்படுத்தப்பட்டவருக்குக் கிடையாது என்பது.அப்படியானால் மண்டல் அறிக்கை உடன்பாடு இல்லைதானே என்றால் இல்லை இல்லை அதைப் பார்ப்பனர்கள் எதிர்த்ததால் நாங்களும் எதிர்த்தோம் என்பது போன்றவை தங்களது பார்ப்பன முகத்தைத் தெளிவாகத் தெரிகிறது என்பதே எமது கருத்து.
இறுதியாக இவ்விவாதத்தில் காலம் கடந்து கலந்து கொள்வதால் இதைத் தொடக்கமாக எடுத்துக் கொண்டு இனி விவாதத்தைத் தொடருங்கள் தோழரே!

இவண்
மௌ.அர.சவகர்.